Friday, December 12, 2008

படித்ததில் பிடித்தது

ஓஷோ தைரியம் என்பது என்ன?
துணிவு என்றால் ஒன்றே ஒன்றுதான் உண்டு.அதாவது இதுவரை நடந்து முடிந்தவைகளைஎல்லாம் மனதில் சேர்த்து வைக்காமல்,அவைகளையெல்லாம் பற்றிக்கொண்டு இருக்காமல்,நடந்து முடிந்தவைகளைஎல்லாம் அளித்துவிடுவதே துணிவு ஆகும்.

Tuesday, December 9, 2008

படித்ததில் பிடித்தது



நம் பிரச்சனை என்ன .நீங்கள் கவலைப்பட வேண்டாம் .கடவுள் பார்த்துக்கொள்வார் என்று யாரோ சொன்னதை நம்பி நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம்.எதனால் இது நடக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் இது பண்ணினால் கடவுளுக்கு கோபம் வருமா ,அது பண்ணினால் சந்தோசம் வருமா என்று கணக்குப் போடுகிறோம்.

படைப்புத் தொழிலை இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற அளவுக்குக் கடவுள் தனது பணியைச் செவ்வனே செய்து முடித்துவிட்டரல்லவா .

சிந்திக்க மூளையையும்,செயல்பட கை,கால்களையும் உங்களுக்கு அளித்திருக்கிறார் அல்லவா .அவற்றைப் பயன்படித்திக்கொண்டு,உங்கள் வாழ்க்கையை மேன்மையாக்கிக் கொள்வது உங்கள் பொறுப்பு தானே .

எதாவது சரியாக நடக்கவில்லை என்றால்,அது கடவுள் அல்லது இயற்கையின் குற்றம் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு,உங்களைத் திருத்திகொள்வதுதானே புத்திசாலித்தனம்.

நன்றி :

உனக்காகவே ஒரு ரகசியம் .

சத்குரு ஜக்கி வாசுதேவ்